முதுமலை புலிகள் காப்பகத்தில் முதல்முறையாக பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் வனத்துறையினர் இணைந்து முதல் முறையாக நடத்தும் 2 நாள் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணியில், 15 குழுக்கள் பங்கேற்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏராளமான காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் என பல்வேறு வன விலங்குகள் இங்கு இருக்கும் நிலையில் வல்சர் எனப்படும் பிணம் தின்னி கழுகுகள், ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சி பறவை, மீன் கொத்தி, மரங்கொத்தி, பச்சை கிளி என 200-க்கும் மேற்பட்ட வகையான பறவைகளும் உள்ளன.



அவற்றுடன் பல வகையான வண்ணத்துப் பூச்சிகளும் இருக்கும் நிலையில் முதல் முறையாக வண்ணத்து பூச்சிகளை கணக்கெடுக்கும் பணி இன்று காலை முதல் தொடங்கப்பட்டு உள்ளது.



இயற்கை மற்றும் பட்டாம்பூச்சிகள் அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



சுமார் 15 குழுக்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் 328 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 250 வகையான பட்டாம்பூச்சிகள் இருப்பதாகவும் முதுமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக முதுமலை வனப்பகுதி என்பது தமிழக, கர்நாடக மற்றும் கேரளா வனப்பகுதியோடு ஒட்டியுள்ளதால் புதிய வகை பட்டாம்பூச்சிகள் இங்கு இருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.



இன்று தொடங்கியுள்ள இந்த கணக்கெடுப்பு பணி நாளை மாலை வரை நடைபெறும் என்பதால், அதன் பின்னர் தான் முதுமலையில் எந்த வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன என்பது தெரிய வரும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் வித்யா மற்றும் தெப்பக்காடு வனச்சரகர் மனோஜ் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...