முதுமலை புலிகள் காப்பகத்தில் முதல்முறையாக பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் தனியார் தொண்டு நிறுவனத்துடன் வனத்துறையினர் இணைந்து முதல் முறையாக நடத்தும் 2 நாள் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணியில், 15 குழுக்கள் பங்கேற்பு.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பகம் 688 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. ஏராளமான காட்டு யானைகள், புலிகள், சிறுத்தைகள் என பல்வேறு வன விலங்குகள் இங்கு இருக்கும் நிலையில் வல்சர் எனப்படும் பிணம் தின்னி கழுகுகள், ஹார்ன்பில் எனப்படும் இருவாச்சி பறவை, மீன் கொத்தி, மரங்கொத்தி, பச்சை கிளி என 200-க்கும் மேற்பட்ட வகையான பறவைகளும் உள்ளன.



அவற்றுடன் பல வகையான வண்ணத்துப் பூச்சிகளும் இருக்கும் நிலையில் முதல் முறையாக வண்ணத்து பூச்சிகளை கணக்கெடுக்கும் பணி இன்று காலை முதல் தொடங்கப்பட்டு உள்ளது.



இயற்கை மற்றும் பட்டாம்பூச்சிகள் அமைப்பினர் மற்றும் வனத்துறையினர் இணைந்து இந்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



சுமார் 15 குழுக்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வரும் நிலையில் தமிழகம் முழுவதும் 328 வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளதாகவும், நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 250 வகையான பட்டாம்பூச்சிகள் இருப்பதாகவும் முதுமலை புலிகள் காப்பக வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக முதுமலை வனப்பகுதி என்பது தமிழக, கர்நாடக மற்றும் கேரளா வனப்பகுதியோடு ஒட்டியுள்ளதால் புதிய வகை பட்டாம்பூச்சிகள் இங்கு இருக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.



இன்று தொடங்கியுள்ள இந்த கணக்கெடுப்பு பணி நாளை மாலை வரை நடைபெறும் என்பதால், அதன் பின்னர் தான் முதுமலையில் எந்த வகையான பட்டாம்பூச்சிகள் உள்ளன என்பது தெரிய வரும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கெடுப்புக்கான ஏற்பாடுகள் முதுமலை புலிகள் காப்பக துணை கள இயக்குனர் வித்யா மற்றும் தெப்பக்காடு வனச்சரகர் மனோஜ் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 230 அடியார்களுக்கு தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் மே 22 முதல் 24 வரை மூன்று நாள்களாக நடைபெற்ற தமிழ் வழிபாட்டு நெறிமுறைப் பயிற்சி வகுப்பில் 23...

கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத் குமார் ஆய்வு; கட்டமைப்பு மேம்பாடு, மருத்துவர்கள் நியமனம் குறித்து ஆலோசனை

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் நேரில் ஆய்வு மேற்கொண்டு, கட்டமைப்பு வசதிகள...

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...