கோவை மருத்துவ மாணவர்களின் மன அழுத்தம் போக்க ‘மனநல நல்லாதரவு மன்றம்’ - முதல்வர் துவக்கி வைத்தார்

கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவ - மாணவிகளின் மன ரீதியான பிரச்சினைகள் குறித்து ஆலோசனை வழங்கக்கூடிய "மனம்" என்ற மனநலம் பேணும் சேவையை முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.


கோவை: தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த படிப்புகள் பயிலும் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கண்டறிந்து, அதற்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கவும், கடும் மன உளைச்சலால் ஏற்படக்கூடிய தற்கொலை எண்ணத்தை ஆரம்ப நிலையிலே கண்டறிந்து தடுப்பதற்காக ‘மனநல நல்லாதரவு மன்றம்’ - "மனம்" (Mind Health Support Forum) என்ற சேவையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

அவ்வாறு அமைக்கப்படும், மன நல நல்லாதரவு மன்றங்களில் அந்தந்த மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர், மன நலத்துறை தலைவர் உள்ளிட்ட அனைத்து துறைத் தலைவர்கள். உதவி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களின் மன நலனை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



அதன்படி, இன்று கோவை அரசு மருத்துவமனையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கவும், வழிகாட்டவும் "மனநல நல்லாதரவு மன்றம்" மற்றும் "நட்புடன் உங்களோடு" ஆகிய மனநல சேவைகளை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

மேலும், இதன் மூலம் மாணவர்களின் நலவாழ்விற்கான வாழ்வியல் நெறிமுறைகள் பற்றிய புத்தாக்க பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், மாணவர்களின் கலைத்திறன், கற்பனைத் திறன் உள்ளிட்ட அனைத்து வகை தனித் திறன்களை கண்டறிந்து, தனித் திறன் மேம்பாட்டிற்கான வழி வகைகள் உருவாக்கப்படும்.

இதேபோல், "நட்புடன் உங்களோடு" என்கின்ற மனநல சேவைக்காக என்கின்ற தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், மனநலம் சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கப்படும்.



இந்த நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நிர்மலா உட்பட மருத்துவமனை மனநல மருத்துவர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...