கோவையில் நடைபெற்று வரும் குடிநீர் திட்டம் குறித்த 2 நாள் பயிற்சி வகுப்பு, கருத்தரங்கம் - மேயர் கல்பனா தொடங்கி வைத்தார்

கோவை மாநகராட்சியில் நடைபெற்று வரும் வரும்‌ 24X7 குடிநீர்‌ திட்ட செயல்பாடுகள் தொடர்பான 2 நாள் பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கில், 80க்கும் மேற்பட்ட திட்ட பொறியாளர்கள்‌ பங்கேற்று விரிவான விளக்கமளிக்க உள்ளதாக தகவல்.



கோவை: கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட பீளமேடு - அவிநாசி சாலையில்‌ உள்ள VIJAY ELANZA ஹோட்டல்‌ கூட்டரங்கில்‌, அம்ரூத்‌ திட்டம்‌, 24X7 குடிநீர்‌ திட்ட செயல்பாடுகள் குறித்த 2 நாள் பயிற்சி வகுப்பு மற்றும் கருத்தரங்கம் இன்று தொடங்கியது.

கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் துணை மேயர்‌ வெற்றிசெல்வன்‌‌, கிழக்கு மண்டல தலைவர்‌ இலக்குமி இளஞ்செல்விகார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை ஆணையாளா்‌ மரு.மோ.ஷர்மிளா தொடங்கி வைத்து பேசினார்‌.



அப்போது அவர் பேசியதாவது, கோவை மாநகராட்சியில்‌ உள்ள பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர்‌ 24 மணி நேரமும்‌ கிடைத்திட வழிவகை செய்தல்‌, குடிநீரை 24 மணி நேரமும்‌ வழங்குதல்‌, குடிநீரை சேமித்தல்‌, சுகாதாரமான குடிநீரை வழங்குதல்‌ உள்ளிட்ட நோக்கத்தை அடிப்படையாக கொண்டு இத்திட்டம்‌ செயல்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 15 மாநகராட்சி, 12 நகராட்சி மற்றும் 1 பேரூராட்சிகளில்‌ அம்ரூத்‌ திட்டத்தின் கீழ்‌ 24மணி நேர குடிநீர்‌ திட்டம்‌ செயல்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

கோவை மாநகராட்சி மற்றும்‌ இதர மாநகராட்சிகள்‌ தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரியம்‌, நகராட்சி, பேரூராட்சி இயக்குநர்‌ நகராட்சி நிர்வாகம்‌ மற்றும்‌ ஊரக வளர்ச்சி துறையிலிருந்து 80க்கும் மேற்பட்ட பொறியாளர்கள்‌ இந்த கருத்தரங்கில்‌ பங்கேற்றுள்ளனர்‌.

இவர்களுக்கு கோவை மாநகராட்சிக்கு தற்போது குடிநீர் விநியோகம்‌ செய்யும்‌ நீர் ஆதாரமாக உள்ள சிறுவாணி, வடவள்ளி, கவுண்டம்பாளையம்‌ கூட்டுக்குடிநீர் திட்டம்‌, பில்லூர்‌ 1, 2 திட்டம்‌ மற்றும்‌ பில்லூர்‌ 3 திட்ட பணிகள்‌ நடைபெற்று வருவது குறித்து விரிவாக எடுத்துரைக்க உள்ளனர்.

மேலும்‌, 24 மணி நேரமும்‌ குடிநீர்‌ திட்டத்தில்‌ ஜெராம்‌ நகர்‌ பகுதியை நேரில்‌ சென்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்‌. 24 மணி நேர குடிநீர்‌ திட்டத்தின்‌ செயல்பாடுகள்‌, குடிநீர்‌ குழாய்‌ அமைக்கும்‌ பணிகள்‌, அதில்‌ ஏற்படும்‌ இன்னல்கள்‌ என்னென்ன என்பது குறித்தும்‌ விளக்கப்படுகிறது.

மேலும்‌, தற்போது பணிகள்‌ நடைபெற்று வரும்‌ இடத்தை பார்வையிட்டு பொறியாளர்கள்‌ ஆய்வு செய்கிறார்கள்‌. இந்தியாவில்‌ பூரி மாநகராட்சியில்‌ இந்த திட்டம்‌ சிறப்பாக செயல்படுத்தப்பட்டு தற்போது பயன்பாட்டில்‌ உள்ளது. தற்போது கோவை மாநகராட்சியில்‌ இத்திட்டம்‌ செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதனைத்‌ தொடர்ந்து புனே பகுதியிலும்‌ அம்ரூத்‌ திட்டம்‌ பயன்பாட்டிற்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 நாள்‌ நடைபெறும்‌ இந்த பயிற்சி மற்றும்‌ கருத்தரங்கை பொறியாளர்கள்‌ பயன்படுத்திக்கொள்ள வேண்டும்

இவ்வாறு மாநகராட்சி துணை ஆணையர் ஷர்மிளா பேசினார்.

இக்கூட்டத்தில்‌ மாநகரப்பொறியாளர்‌ இளங்கோவன்‌, செயற்பொறியாளா்‌ முருகேசன், TUFIDCO, State Mission management Ltd., Team leader ராஜா மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரியம்,‌ மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளாச்சித் துறைகளின்‌ சார்பில்‌ 80 மேற்பட்ட பொறியாளா்கள்‌ மற்றும்‌ சூயஸ் நிறுவனத்தினர்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...