ஒரே நாடு, ஒரே ரேஷன் போல, ஒரே சுடுகாடு என்பதை கொண்டு வர வலியுறுத்தி கோவையில் தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அன்னூர் அருகே பொது சுடுகாட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த மூதாட்டியின் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்ததை கண்டித்து, கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தலித் விடுதலை கட்சியினர் ஆர்ப்பாட்டம்.


கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசாம் பாளையம் பகுதியை சேர்ந்த மூதாட்டி ரங்கம்மாள். பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த இவர் கடந்த 13ம் தேதி வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அவரது உடலை அங்குள்ள பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய கொண்டு சென்ற போது, அங்குள்ள சில நபர்கள் ஜாதியை குறிப்பிட்டு தடுத்து நிறுத்தி அங்கு அடக்கம் செய்ய கூடாது என மிரட்டியதாக கூறப்படுகிறது.

பின்னர் பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், அரசு அலுவலர்கள் சிலர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவரது உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது.



இந்நிலையில் ஜாதியை குறிப்பிட்டு உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கோவை மாவட்ட தலித் விடுதலை கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் சம்பவத்தை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ஒரே நாடு ஒரே ரேஷன் என கூறி வரும் மத்திய அரசு ஒரே சுடுகாடு என்ற நிலையை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தலித் விடுதலை கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செங்கோட்டையன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

மேலும், இதில் இணை பொதுச் செயலாளர்கள் விடுதலை செல்வன், சகுந்தலா தங்கராஜ் உட்பட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், சாதி ஒழிப்பு முன்னணியினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...