கோவை நரசிபுரம் அருகே விவசாய தோட்டங்களில் உலா வரும் காட்டு யானை - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!

தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் அருகே விவசாய நிலங்களில் உலா வரும் காட்டு யானைகள், பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில், அப்பகுதியில் யானைகள் உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரம் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் கூட்டம் இரவு நேரங்களில் உலா வருகிறது.

அவ்வாறு உலா வரும் காட்டு யானைகள், சில நேரங்களில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில், வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து சென்று விவசாய நிலங்களில் உலா வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.



அதே நேரத்தில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவதால், அச்சமடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள் வெளியே வரவே தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லவும் கூட முடியாத நிலை உள்ளது.



இந்நிலையில் நரசிபுரம் பகுதியில் இரவு நேரங்களில் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே காட்டு யானைகள் உலா வரும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே யானைகள் விவசாய தோட்டங்களுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...