கோவை நரசிபுரம் அருகே விவசாய தோட்டங்களில் உலா வரும் காட்டு யானை - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!

தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் அருகே விவசாய நிலங்களில் உலா வரும் காட்டு யானைகள், பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில், அப்பகுதியில் யானைகள் உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரம் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் கூட்டம் இரவு நேரங்களில் உலா வருகிறது.

அவ்வாறு உலா வரும் காட்டு யானைகள், சில நேரங்களில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில், வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து சென்று விவசாய நிலங்களில் உலா வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.



அதே நேரத்தில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவதால், அச்சமடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள் வெளியே வரவே தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லவும் கூட முடியாத நிலை உள்ளது.



இந்நிலையில் நரசிபுரம் பகுதியில் இரவு நேரங்களில் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே காட்டு யானைகள் உலா வரும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே யானைகள் விவசாய தோட்டங்களுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...