கோவை நரசிபுரம் அருகே விவசாய தோட்டங்களில் உலா வரும் காட்டு யானை - சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!

தொண்டாமுத்தூர் அடுத்த நரசிபுரம் அருகே விவசாய நிலங்களில் உலா வரும் காட்டு யானைகள், பயிர்களை சேதப்படுத்தி வரும் நிலையில், அப்பகுதியில் யானைகள் உலா வரும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே நரசிபுரம் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்களுக்குள் கடந்த சில வாரங்களாக காட்டு யானைகள் கூட்டம் இரவு நேரங்களில் உலா வருகிறது.

அவ்வாறு உலா வரும் காட்டு யானைகள், சில நேரங்களில் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருவதும் தொடர்கதையாகி வருகிறது.

இதன் காரணமாக அப்பகுதியில், வனத்துறையினர் இரவு நேரங்களில் ரோந்து சென்று விவசாய நிலங்களில் உலா வரும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர்.



அதே நேரத்தில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் உலா வருவதால், அச்சமடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள் வெளியே வரவே தயங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் பொதுமக்கள், இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்லவும் கூட முடியாத நிலை உள்ளது.



இந்நிலையில் நரசிபுரம் பகுதியில் இரவு நேரங்களில் விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே காட்டு யானைகள் உலா வரும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே யானைகள் விவசாய தோட்டங்களுக்குள் வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வனத்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...