கோவையில் பீடா கடையில் வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை - ஒடிசா இளைஞர் கைது..!

கோவை மலுமிச்சம்பட்டி அருகே பீடா கடையில், கஞ்சா சாக்லேட்டுகள் வைத்து விற்பனை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷஹாதிப் ராய் என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 125 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள பீடா கடையில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் செட்டிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் அங்குச் சென்று பீடா கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பீடா கடையில் சாக்லெட் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதனை சோதனை செய்த போது அது கஞ்சா சாக்லெட்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷஹாதிப் ராய் (25) என்பதும், தற்போது கோவை சூலூர் தென்னம்பாளையம் பகுதியில் நண்பர்களோடு தங்கிக் கொண்டு, மலுமிச்சம்பட்டி பகுதியில் பீடா கடை நடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் அதனுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த சுமார் 195 கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸார் ஷஹாதிப் ராவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பீடா கடையில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...