கோவையில் பீடா கடையில் வைத்து கஞ்சா சாக்லேட் விற்பனை - ஒடிசா இளைஞர் கைது..!

கோவை மலுமிச்சம்பட்டி அருகே பீடா கடையில், கஞ்சா சாக்லேட்டுகள் வைத்து விற்பனை செய்து வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷஹாதிப் ராய் என்ற இளைஞரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 125 கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் குட்கா மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க போலீஸார் தனிப்படை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை மலுமிச்சம்பட்டி அருகே உள்ள பீடா கடையில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் செட்டிபாளையம் காவல் உதவி ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் அங்குச் சென்று பீடா கடையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பீடா கடையில் சாக்லெட் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. அதனை சோதனை செய்த போது அது கஞ்சா சாக்லெட்டுகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஷஹாதிப் ராய் (25) என்பதும், தற்போது கோவை சூலூர் தென்னம்பாளையம் பகுதியில் நண்பர்களோடு தங்கிக் கொண்டு, மலுமிச்சம்பட்டி பகுதியில் பீடா கடை நடத்தி வந்தது தெரியவந்தது.

மேலும் அதனுடன் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த சுமார் 195 கஞ்சா சாக்லெட்டுகளை பறிமுதல் செய்த போலீஸார் ஷஹாதிப் ராவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பீடா கடையில் கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...