கோவையில் கல்லூரி அருகே கஞ்சா விற்க முயன்ற கும்பல் - மூவரை மடக்கி பிடித்த போலீசார்; இருவர் தப்பியோட்டம்

கோவைப்புதூர் தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்க நின்றிருந்த 5 பேர் கொண்ட கும்பலில், மூன்று பேரை போலீசார் மடக்கி பிடித்து, அவர்களிடம் இருந்து 1. 250 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சுந்தராபுரத்தை சேர்ந்த இருவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.



கோவை: கோவை மாநகரம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா விற்பனை தடுக்க மாநகர போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனையை தடுக்க சிறப்பு தணிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவைப்புதூர் அருகே சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளர், முருகன் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது கோவைப்புதூர் தனியார் கல்லூரி அருகே ஐந்து இளைஞர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். போலீசார் வருவதை கண்டதும் 5 பேரும் தப்பி செல்ல முயன்றுள்ளனர். அப்போது, போலீசார் மூன்று பேரை மடக்கி பிடித்து சோதனை செய்து போது, கஞ்சா வைத்திருந்து தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 1.250 கிலோ கஞ்சா மற்றும் செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அவர்கள் மதுக்கரை பகுதியை சேர்ந்த ரகு கிருஷ்ணன் (22) அஜித்குமார் (25)குனியமுத்துரை சேர்ந்த கிருஷ்ண பிரசாத் (21) என்பது தெரியவந்தது.

மூவரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தப்பிச் சென்ற சுந்தராபுரத்தை சேர்ந்த கௌதம் மற்றும் ஹரிஹரன் என்ற இருவரை தேடி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...