ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தடை விதிக்க கோரி திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு..!

திருப்பூர் அடுத்த அழகுமலை பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்துவதால், விளைநிலங்கள் மற்றும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த தடை விதிக்க கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அழகுமலை ஊராட்சிக்கு உட்பட்ட நாடார் காலனி மற்றும் கிறிஸ்டியன் காலனி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் ஆடு, மாடு மேய்ப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். அதேபோல் அரசாங்கத்திற்கு வழங்கப்படும் இலவச ஆடு வளர்ப்பு திட்டத்தில் சுமார் 50 குடும்பங்கள் ஆடுகளை பெற்று மேய்ச்சல் நிலத்தில் தான் மேய்த்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே தற்போது அழகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நல சங்கம் சார்பாக இப்பகுதியில் விழா நடத்துவதற்கு பந்தல் அமைத்து கால்கோல் விழா நேற்று நடத்தி உள்ளனர்.



இந்நிலையில், இப்பகுதியில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும் பட்சத்தில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, வருடம் முழுவதும் பசுமை பாதிக்கப்பட்டு ஆடு மாடுகளுக்கு உணவு கிடைக்காத நிலை ஏற்பட்டு விடும் எனக் கூறி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தடை விதிக்க கோரி 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேரில் வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.



அவர்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜல்லிக்கட்டுக்கு வரும் நபர்கள் மது அருந்திவிட்டு அப்பகுதி குடியிருப்பு பகுதி மக்களிடம் மது போதையில் ரகளை ஈடுபடுகின்றனர். இதனால் அப்பகுதி பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தாங்கள் அனைவரும் பட்டியல் இன மக்கள் என்பதால் உயர் சாதியினர் ஜல்லிக்கட்டை நடத்தியே தீருவோம் என்று அடக்கு முறையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மாவட்ட ஆட்சியர் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் மற்றும் ஆடு மாடுகளின் நலன்களை கருத்தில் கொண்டு ஜல்லிக்கட்டு நடத்தாமல் இருக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...