2022-ஆம் ஆண்டிற்கான ‘விஷ்ணுபுரம் விருது’ - எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு வழங்கப்பட்டது

கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடைபெற்ற 2022-ஆம் ஆண்டிற்கான ‘விஷ்ணுபுரம் விருது’ வழங்கும் விழாவில், பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதாவுக்கு விஷ்ணுபுரம் விருது மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கப் பரிசுடன் வழங்கப்பட்டது.


கோவை: நவீன தமிழ் இலக்கியத்திற்கு செழுமை சேர்த்த முன்னோடி படைப்பாளுமைகளைக் கவுரவிக்கும் விதமாக 'விஷ்ணுபுரம் விருது' கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.

கோவையை மையமாகக் கொண்டு செயல்படும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் சார்பில் வழங்கப்படும் இந்த விருது கலையம்சம் மிக்க விருது சிற்பமும், பாராட்டுப் பத்திரமும், ரூ.2,00,000 விருதுத் தொகையை உள்ளடக்கியதாகும்.

இந்நிலையில், 2022-ஆம் ஆண்டிற்கான 13வது விஷ்ணுபுரம் விருது வழங்கும் விழா, கோவை ஆர்.எஸ்.புரம் தனியார் அரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில், விருது பெறும், எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் எழுத்தாளுமை குறித்த 'தி அவுட்சைடர்' என்ற ஆவணப்படம், எழுத்தாளர் அராத்துவின் இயக்கத்தில் திரையிடப்பட்டது.



மேலும், அவரது படைப்புலகம் குறித்து சக எழுத்தாளர்கள் எழுதிய நூலும் வெளியிடப்பட்டது.

இந்த நிகழ்வில் எழுத்தாளர்கள் அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த எழுத்தாளர், கவிஞர் மமங் தாய், எழுத்தாளர் ஆர். காளிப்ரசாத், எழுத்தாளர் போகன் சங்கர், எழுத்தாளர் ஜெயமோகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இறுதியாக எழுத்தாளர் சாரு நிவேதிதா ஏற்புரை வழங்கினார்.



இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சமீரன், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...