திருப்பூர் பல்லடம் அருகே தடை செய்யப்பட்ட குட்காவை பதுக்கி வைத்து விற்பனை - இருவர் கைது..!

பல்லடம் சாலை சந்தப்பேட்டை அருகே உள்ள குடோனில் நடத்திய அதிரடி சோதனையில் பல லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்காவை கைப்பற்றிய போலீசார், குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவரை கைது செய்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.

இதன் அடிப்படையில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் இன்று தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் தெற்கு காவல் நிலையத்திற்கு உட்பட்ட பல்லடம் சாலை சந்தப்பேட்டை அருகில் உள்ள குடோனில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.



இதனையடுத்து அந்த இடத்திற்கு விரைந்து சென்ற தனிப்படை போலீசார் குடோனில் இருந்த 274 கிலோ எடை கொண்ட ஹான்ஸ் மற்றும் குட்கா உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.



இந்நிலையில், போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் ஈரோடு பகுதியைச் சேர்ந்த தளராம் ஆகியோரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு இடங்களிலும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் இருக்கிறதா என்பது குறித்து தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...