கோவை மாவட்ட அதிமுகவில் இருந்து 3,000 பேர் விரைவில் திமுகவில் இணையவுள்ளனர் - கோவை செல்வராஜ்

வட கோவையில் உள்ள திமுக அலுவலகத்தில் பேட்டியளித்த அவர், அதிமுக என்னும் கம்பெனி நான்காக பிரிந்துள்ளது, 6 மாதத்திற்குள் அதிமுக முழுவதுமாக கரைந்து போகும் என்றும், விரைவில் கோவை மாவட்ட அதிமுகவில் இருந்து 3000 பேர் திமுகவில் இணைய உள்ளனர் என்றார்.


கோவை: கோவை மாவட்டம் வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் இன்று கோவை செல்வராஜ் செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது அவர் பேசியதாவது, முந்தைய அதிமுக ஆட்சியில் நடைபெற்ற எல்.இ.டி பல்பு, கோவை குளங்கள் தூர்வாரும் பணி உள்ளிட்ட பல்வேறு ஊழல்கள் தொடர்பாக என்னிடம் ஆதாரங்கள் உள்ளன. அடுத்த வாரம் ஆதாரங்களை லஞ்ச ஒழிப்பு துறையினரிடம் நேரில் ஒப்படைக்க உள்ளேன்.

கோவை மாவட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகிகள் உட்பட 3 ஆயிரம் பேர் அதிமுகவில் இருந்து விலகி விரைவில் முதலமைச்சர் தலைமையில் திமுகவில் இணைவார்கள். கோடநாடு கொலை கொள்ளை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முதலில் மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள நிதிகளை பெற்று தர நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஜகவிற்கு தமிழகத்தில் வருங்காலம் இல்லை. ஓபிஎஸ் உடன் தாம் உண்மையாக இருந்த போதும் அவர் அவ்வாறு இல்லை. இப்போது அவர் குறித்து விமர்சிக்க எதுவும் இல்லை.

முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சாலைகள் சேதமானது குறித்து அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். ஆனால் தற்போதைய தமிழக அரசு மீது அரசியல் காரணங்களுக்காக குற்றம் சாட்டி வருகின்றனர்.

அன்னூர் டிட்கோ விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டும் என்ற நோக்கில் சுமார் 25 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதை தடுக்கும் வகையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...