நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை துவங்கிய மக்கள் நீதி மய்யம் - கோவையில் பொதுக்கூட்டத்துடன் துவக்கம்

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதிமய்யம் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் முதல் பொதுக்கூட்டத்தை கோவையில் நடத்தி தொடங்கியுள்ளனர்.


கோவை: வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதன் துவக்கமாக அக்கட்சியின் தலைவர் கமலஹாசன் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதி காமராஜபுரம் பகுதியில் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்று கட்சியை சேர்ந்த 110 பேர் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தனர்.

இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.



இந்த கூட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் தங்கவேலு, தலைமையில் மண்டல செயலாளர், ரங்கநாதன் முன்னிலையில் மத்திய மாவட்ட செயலாளர் பிரபு வரவேற்புரை ஆற்றினார்.



இதேபோல் மாநிலத் துணைத் தலைவர் மௌரியா மற்றும் இளைஞரணி மாநில செயலாளர் கவிஞர் சினேகன் ஆகியோரும் சிறப்பு உரையாற்றினர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...