கோவை மதுக்கரை நெடுஞ்சாலை அருகே ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜான்சன் (45), மதுக்கரை சேர்ந்த ஜாஹிர் உசேன் (54), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
கோவை: கோவை மாவட்டம் முழுவதும் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தற்போது, 3 நம்பர் என்ற ஆன்லைன் லாட்டரி விற்பனை அதிகரித்துள்ளதால் அவற்றையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுக்கரை எல்.என்.டி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வைத்து ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்படி, மதுக்கரை போலீசார் அங்கு இன்று ஆய்வு செய்த போது, அங்கு ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜான்சன் (45), மதுக்கரை சேர்ந்த ஜாஹிர் உசேன் (54), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 3 நம்பர் லாட்டரி விற்பனைக்காக வைத்திருந்த நோட்டு புத்தகம், மற்றும் ரூ.2,050 பணத்தை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில், மதுக்கரை எல்.என்.டி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் வைத்து ஆன்லைன் லாட்டரி விற்பனை நடப்பதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின்படி, மதுக்கரை போலீசார் அங்கு இன்று ஆய்வு செய்த போது, அங்கு ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ஜான்சன் (45), மதுக்கரை சேர்ந்த ஜாஹிர் உசேன் (54), ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து 3 நம்பர் லாட்டரி விற்பனைக்காக வைத்திருந்த நோட்டு புத்தகம், மற்றும் ரூ.2,050 பணத்தை பறிமுதல் செய்தனர்.