கூடலூரில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் கடைகளில் பயங்கர தீ விபத்து - ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாகின

கூடலூர் - தேவர்சோலை நெடுஞ்சாலையில் உள்ள பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கடையில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், தீ மளமளவென 2வது மாடிக்கும் பரவியதால் சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகின.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து தேவர்சோலை செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள வணிக வளாகத்தில் உசேன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் கடை செயல்பட்டு வருகிறது.



இந்த கடையில் ஏராளமான பழைய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று காலை திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது கூறப்படுகிறது. இதனை கண்ட அக்கம் பக்கம் கடைகாரர்கள் உடனடியாக கூடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.



இந்நிலையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீ மளமளவென 2-வது மாடிக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.



இந்த தீ விபத்தில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான பழைய இரும்பு மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து நாசமாகின. இந்நிலையில் இந்த தீ விபத்தானது, மின் கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது சதிச் செயலா என்பது குறித்து கூடலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...