கோவையில் இருவேறு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது - 3.1 கிலோ கஞ்சா பறிமுதல்

பெரியநாயக்கன் பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை, கையும் களவுமாக பிடித்து கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 3.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த பின் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.


கோவை: கஞ்சா போதை பொருள் விற்பனையாளர்களின் சட்டவிரோத செயல்களை தடுக்க போலீசார் தனிப்படை அமைத்து போதைப்பொருள் விற்பனையை தடுத்து கைது நடவடிக்கையில் இறங்கி உள்ளனர்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் காவல்துறையினர் ராக்கிபாளையம் பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது அப்பகுதியில் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த ரவி(45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 2 கிலோ அளவிலான கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

அதேபோல் துடியலூர் அடுத்த கவுண்டம்பாளையம் கல்பனா தியேட்டர் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர்.

அப்போது அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த உதயச்சந்திரன் (39) என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 1.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து மொத்தம் 3.100 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த நிலையில், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...