கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை - கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது…!

ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த கசிய தகவலின் படி, தனிப்படை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் மூவரை கைது செய்தனர்.



கோவை: கோவை ஈச்சனாரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உட்பட மூவரை மதுக்கரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சாதாரண உடையில் சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான நின்றுக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரனையின் போது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை சோதனை செய்த போது கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

முதல் கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் தென்காசியை சேர்ந்த மகேந்திரன் (22), சுப்பிரமணியன் (23), மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை (21) என்பது தெரியவந்தது.

இதில் மகேந்திரன், சுப்பிரமணி இருவரும் கோவை ஹோப்ஸ் பகுதியில் தங்கி இரு சக்கர வாகன டேக்ஸி ஓட்டிக் வருகின்றனர் என்பதும் அண்ணாமலை, தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த சுமார் 2.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...

மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்க...

கோவை பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு நடவடிக்கை: புகைமருந்து தெளிப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணி

கோவை மாநகராட்சி 41வது வார்டில் மாமன்ற உறுப்பினர் கே.சாந்தி சந்திரன் அறிவுறுத்தலின்படி பி.என்.புதூரில் கொசு ஒழிப்பு புகைம...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு தடுப்பு, சுகாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்றன

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27ல் டெங்கு கொசு ஒழிப்பு, அங்கன்வாடி ஆய்வு, சாலை சுத்தம், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 192 பேர் இரத்த தானம்

உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் இரத்த தான முகாம் நடத்தப்பட்டது. சிங்...

கோவை மருதமலை முருகன் கோயில் உண்டியலில் ரூ.1.05 கோடி காணிக்கை: தங்கம், வெள்ளி நகைகளும் குவிந்தன

Coimbatore மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் திறப்பில் ரூ.1 கோடியே 5 லட்சம் ரொக்கமும், 105 கிராம் தங்கம்,...