கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே கஞ்சா விற்பனை - கல்லூரி மாணவர் உட்பட 3 பேர் கைது…!

ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லூரி அருகே மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்வதாக தனிப்படை போலீஸாருக்கு கிடைத்த கசிய தகவலின் படி, தனிப்படை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீசார் மூவரை கைது செய்தனர்.



கோவை: கோவை ஈச்சனாரி அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர் உட்பட மூவரை மதுக்கரை தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸார் தனிப்படை அமைத்து கண்காணிப்பை தீவிரபடுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கோவை ஈச்சனாரி தனியார் கல்லூரி அருகே கல்லூரி மாணவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை நடப்பதாக தனிப்படை போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து சாதாரண உடையில் சென்ற தனிப்படை உதவி ஆய்வாளர் குப்புராஜ் தலைமையிலான போலீஸார் அங்கு சந்தேகத்திற்கிடமான நின்றுக் கொண்டிருந்த 3 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர்.

விசாரனையின் போது, முன்னுக்குபின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார் அவர்களை சோதனை செய்த போது கஞ்சா மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

முதல் கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர்கள் தென்காசியை சேர்ந்த மகேந்திரன் (22), சுப்பிரமணியன் (23), மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த அண்ணாமலை (21) என்பது தெரியவந்தது.

இதில் மகேந்திரன், சுப்பிரமணி இருவரும் கோவை ஹோப்ஸ் பகுதியில் தங்கி இரு சக்கர வாகன டேக்ஸி ஓட்டிக் வருகின்றனர் என்பதும் அண்ணாமலை, தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மூவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடமிருந்த சுமார் 2.1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...