நீலகிரி அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரை திமுக எம்.பி ஆ.ராசா, அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் சந்தித்து ஆறுதல் - நிவாரண உதவியையும் வழங்கினர்

நீலகிரி அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய போது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினரை திமுக எம்.பி ஆ.ராசா, அமைச்சர் கா.ராமச்சந்திரன் நேரில் ஆறுதல் தெரிவித்து, அரசு அறிவித்த ரூ.4 லட்சம் நிவாரண நிதியுடன், ஆ.ராசா தமது சார்பில் தலா ஒரு லட்சத்தையும் வழங்கினார்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள ஆனிக்கல் பகுதியில் கோவிலுக்கு சென்று திரும்பியபோது காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த 4 பேரின் குடும்பங்களுக்கும் தலா 4 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.



இந்நிலையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகியோர் உயிரிழந்த 4 பேரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து, மாநில பேரிடர் மேலாண்மை நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4 லட்சத்திற்கான காசோலையை குடும்பத்தினரிடம் வழங்கினர். இந்நிலையில், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, தனது சார்பில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாய் 4 லட்சம் ரூபாயையும் வழங்கினார்.

இதையடுத்து ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது, நீலகிரி மாவட்டம் உதகை அருகே கோவிலுக்கு சென்று திரும்பி வரும் பொழுது ஒரு சிறிய ஓடையை கடக்க முயன்ற சரோஜா(65), வாசுகி(45), விமலா(35), சுசீலா(50) ஆகிய நான்கு பேரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு பின்னர் சடலமாக மீட்கப்பட வேண்டிய துயர சூழ்நிலை ஏற்பட்டது வருத்தம் அளிக்கிறது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் தலைமையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நால்வரின் சடலமும் மீட்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், முதலமைச்சர் உத்தரவின் பேரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித், முன்னாள் அரசு கொறடா பா.மு.முபாரக், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, உதகை வட்டாட்சியர் ராஜசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயா மற்றும் நந்தகுமார் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...