கோவையில் எஸ்.பி.ஐ வங்கியின் கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை ரயில் நிலையம் அருகே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் இன்றும், நாளையும் நடைபெறும் கடன் வழங்கும் முகாமின் தொடக்க விழாவில் ஆட்சியர் சமீரன் பங்கேற்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள குறிஞ்சி காம்ப்ளக்சில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வளாகத்தில் கடன் வழங்கும் முகாமின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்று முகாமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.



இந்த முகாமானது இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் முகாமில், அரசு நிதியுதவி பெறும் திட்டங்களுக்கு கடன், இளம் தொழில் முனைவோருக்கான Standup India & Mudra திட்டங்கள், மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் கூடிய PMEGP, NEEDS முதலான திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.



மேலும், விவசாய அபிவிருத்தி திட்டங்கள், வேளாண் உட்கட்டமைப்பு திட்டங்கள், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள், மாணவர்களுக்கான கல்விக் கடன் மற்றும் ஏராளமான அரசு கடன் திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. கடன் முகாமில் தகுதி பெற்றவருக்கு உடனடி கடன் ஒப்புதல்கள் வழங்கப்படும்.

இந்தக் கடன் முகாமில், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், KVIC, NABARD, வேளாண் துறை, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம், ஆவின், வேளாண்மை சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண்மை வர்த்தகத் துறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கரும்பு உற்பத்தி மையம், வானவராயர் வேளாண்மை கல்லூரி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பங்கு பெற்றனர்.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...