கோவையில் எஸ்.பி.ஐ வங்கியின் கடன் வழங்கும் முகாமை தொடங்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை ரயில் நிலையம் அருகே ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா சார்பில் இன்றும், நாளையும் நடைபெறும் கடன் வழங்கும் முகாமின் தொடக்க விழாவில் ஆட்சியர் சமீரன் பங்கேற்று ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.



கோவை: கோவை ரயில் நிலையம் அருகில் உள்ள குறிஞ்சி காம்ப்ளக்சில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி வளாகத்தில் கடன் வழங்கும் முகாமின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் பங்கேற்று முகாமை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.



இந்த முகாமானது இன்றும் நாளையும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடன் முகாமில், அரசு நிதியுதவி பெறும் திட்டங்களுக்கு கடன், இளம் தொழில் முனைவோருக்கான Standup India & Mudra திட்டங்கள், மத்திய மற்றும் மாநில அரசின் மானியத்துடன் கூடிய PMEGP, NEEDS முதலான திட்டங்கள், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.



மேலும், விவசாய அபிவிருத்தி திட்டங்கள், வேளாண் உட்கட்டமைப்பு திட்டங்கள், பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள், மாணவர்களுக்கான கல்விக் கடன் மற்றும் ஏராளமான அரசு கடன் திட்டங்களின் கீழ் கடன் வழங்கப்படுகிறது. கடன் முகாமில் தகுதி பெற்றவருக்கு உடனடி கடன் ஒப்புதல்கள் வழங்கப்படும்.

இந்தக் கடன் முகாமில், மாவட்ட தொழில் மையம், மகளிர் திட்டம், KVIC, NABARD, வேளாண் துறை, தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம், ஆவின், வேளாண்மை சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண்மை வர்த்தகத் துறை, வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், கரும்பு உற்பத்தி மையம், வானவராயர் வேளாண்மை கல்லூரி, உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பங்கு பெற்றனர்.

Newsletter

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...