கோவை டூ நேபால் விழிப்புணர்வு பயணம் - பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க இரு சக்கர பிரச்சார பயணம்

6 இரு சக்கர வாகனங்களில், கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த 7000 கி.மீ பிரச்சார பயணமானது, கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டுவில் முடிவடைய உள்ளது.



கோவை: பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சைபர் செக்கியூரிட்டி நிறுவனம் சார்பில் இரு சக்கர வாகன பிரச்சார பயணத்தை, கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பயணமானது, 6 இரு சக்கர வாகனங்களில் கோவையில் துவங்கி நேபாளில் உள்ள காத்மண்டுவில் முடிவடையும். 14 நாட்கள் தொடரும் இந்த வாகன பிரச்சாரமானது, மொத்தம் 7000 கிமீ தூரத்தை கடந்து, செல்லும் வழியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய தன்னார்வலர் மற்றும் சைபர் கிரைம் கன்சல்டன்ட் சங்கர் சுப்ரமணியன், தற்போது உள்ள காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக, ஃபோன் செயலி மூலம் பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பெண்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதனடிப்படையில், விழிப்புணர்வு பதாகை மற்றும் துண்டு சீட்டு பிரசுரம் செய்து கோவையில் இருந்து நேபால் வரை பயணிக்க உள்ளோம். 7000 கி.மீ பயண வழியில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம், என்றார்.

பெண்களுக்கு எதிரான சைபர் குற்றங்களை தடுக்க விழிப்புணர்வு என்பது மிக முக்கியம். எந்தந்த செயலிகளை பயன்படுத்தக் கூடாது, புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடும் போது கவனிக்க வேண்டியவை, புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டு நபர்கள் விரிக்கும் வலையில் சிக்கிக் கொள்ளாமல், தைரியமாக காவல்துறையினரிடம் புகார் அளிக்க பெண்கள் முன்வர வேண்டும். இவை அனைத்தையும் பெண்களுக்கு எடுத்துக்கூற, இது போன்ற விழிப்புணர்வு நிகழ்சிகள் அவசியம் என்று போலிஸ் தரப்பில் தெரிவித்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...