தைப்பூசத்தையொட்டி ஜன.15 முதல் பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் - பொள்ளாச்சி எம்.பி கு.சண்முகசுந்தரம்

ரயில்வே சேர்மன் V.K.திரிப்பாத்தியை சந்தித்து உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகள், தென்னை சார்ந்த பொருட்களை வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்ல பொள்ளாச்சியில் கிசான் ரயில் திட்டம் தொடங்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினரான கு. சண்முக சுந்தரம், ரயில்வே சேர்மன் V.K.திரிப்பாத்தியை நேரில் சந்தித்தார்.

அப்போது, தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கோவை, பொள்ளாச்சியில் இருந்து பழனிக்கு வரும் ஜனவரி 15ஆம் தேதி முதல் சிறப்பு ரயிலை இயக்க வேண்டும் வலியுறுத்தினார்.

மேலும், உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதிகளில் விளைகின்ற தேங்காய், இளநீர் அனைத்து வகையான காய்கறிகள் மற்றும் தென்னை நார் சார்ந்த பல்வேறு பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

இந்த பொருட்களை குறைந்த செலவில் மும்பை, டெல்லி போன்ற வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்ல உதவும் வகையில், கிசான் ரயில் திட்டத்தை பொள்ளாச்சியில் தொடங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...