கோவையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர் சமீரன்

கோவை சித்தாபுதூரில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளின் கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் சமீரன் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.



கோவை: உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்காக பல்வேறு போட்டிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை சித்தாபுதூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.



இதில் மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தார்.



இதில் மாற்றுத்திறனாளிகள் நடனம், நாடகங்களை நிகழ்த்தி காட்டினர்.



பின்னர் இந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சியருக்கு காது கேளாத மாற்றுத்திறனாளிகள் இசையுடன் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.



இந்த நிகழ்ச்சியில் செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைவாக உள்ள 12 மாணவர்களுக்கு ரூ.1,62,588 மதிப்புள்ள ஸ்மார்ட் போன்களும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,79,700 மதிப்பிலான நவீன செயற்கை கால்களையும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4,24,000 மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளையும் வழங்கினார்.



இதேபோல் 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.20,800 மதிப்பிலான சி.பி.சேர்களையும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,200 மதிப்பிலான ஊன்றுகோல்களும் 11 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ரூ.4,000 வீதம் கல்வி உதவித்தொகை என மொத்தம் 36 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்டத்தில் சுமார் 53,000 மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். 22,715 மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்று உள்ளனர்.

வருவாய் துறையின் மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு ஓய்வூதியம் ரூ.1,000-ல் இருந்து, ரூ.1,500ஆக உயர்த்தி ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சூலூர் பகுதி-3 திட்டப்பகுதி. பன்னீமடை கிழக்கு திட்டப்பகுதி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வர ஏதுவாக தரைத்தளத்தில் 27 மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை 520 மையம் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்பட்டுள்ளன. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், தேவையான நலத்திட்டங்கள் மற்றும் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் சைகை மொழியில் பாடிய நம்முடைய தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் இந்தியா முழுவதும் பிரபலமடைந்துள்ளது. சைகை மொழியில் பாடிய குழந்தைகள் அனைவருக்கும் தனது பாராட்டுக்கள்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...