தனி நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பென்சன் பெறும் வயதை 55ஆக உயர்த்துவது, உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்க வேண்டும்.



உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தரப்பு குழுக்களை அமைத்திட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறிய ஓய்வூதியம் 3,000த்தை உடனடியாக வழங்க வேண்டும்,

பென்ஷன் பெரும் வயதை 55 ஆக மாற்றிட வேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இறக்கு கூலி உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரயில்வே கூட் செட்டில் பணிபுரியும் சுமை பணி தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



ரயில்வேயில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குடிநீர், குளியல் அறை, அடையாள அட்டை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மளிகை மார்க்கெட்டில் வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...