தனி நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் சிஐடியு சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பென்சன் பெறும் வயதை 55ஆக உயர்த்துவது, உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கத்தின் (சிஐடியு) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சிஐடியு சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தில், சுமைப்பணி தொழிலாளர்களுக்கு தமிழக அரசு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் வழங்க வேண்டும்.



உள்ளூர் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தரப்பு குழுக்களை அமைத்திட வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் கூறிய ஓய்வூதியம் 3,000த்தை உடனடியாக வழங்க வேண்டும்,

பென்ஷன் பெரும் வயதை 55 ஆக மாற்றிட வேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் குடோனில் பணிபுரியும் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு இறக்கு கூலி உயர்த்தி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரயில்வே கூட் செட்டில் பணிபுரியும் சுமை பணி தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



ரயில்வேயில் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு குடிநீர், குளியல் அறை, அடையாள அட்டை போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மளிகை மார்க்கெட்டில் வேலை செய்யும் சுமைப்பணி தொழிலாளர்களின் கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.



இவ்வாறு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...