கோவை முழுவதும் நள்ளிரவு முதல் தொடர் மழை - மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை மாவட்டம் முழுவதும் நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலவும் மூடுபனியால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி.



கோவை: கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.



அதன்படி, நள்ளிரவு முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான காந்திபுரம், உக்கடம், சுந்தராபுரம், ஆர்.எஸ்.புரம், மற்றும் சூலூர், பேரூர் என பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனிடையே பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கடுமையான மூடுபனி இருந்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.

இந்நிலையில் இன்று பெரும்பாலான பள்ளிகளில் அரை இறுதி தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் மழையில் நனைந்தவாறு பள்ளிகளுக்கு சென்றனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...