கோவை முழுவதும் நள்ளிரவு முதல் தொடர் மழை - மூடுபனியால் வாகன ஓட்டிகள் அவதி

கோவை மாவட்டம் முழுவதும் நள்ளிரவு முதல் தொடர் மழை பெய்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் நிலவும் மூடுபனியால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி.



கோவை: கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் நள்ளிரவு முதல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இரு தினங்களுக்கு முன்பு மாண்டஸ் புயல் கரையை கடந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகத்தில் சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ஈரோடு, மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.



அதன்படி, நள்ளிரவு முதல் கோவை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளான காந்திபுரம், உக்கடம், சுந்தராபுரம், ஆர்.எஸ்.புரம், மற்றும் சூலூர், பேரூர் என பரவலாக தொடர் மழை பெய்து வருகிறது.

இதனிடையே பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் கடுமையான மூடுபனி இருந்தால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றன.

இந்நிலையில் இன்று பெரும்பாலான பள்ளிகளில் அரை இறுதி தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் மழையில் நனைந்தவாறு பள்ளிகளுக்கு சென்றனர்.

Newsletter

ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

கோவையில் ஆழியார் அணை 55.55 அடி, பரம்பிக்குளம் அணை 21.84 அடி, சோலையாறு அணை 75.19 அடி நீர்மட்டத்தை எட்டியுள்ளன. தென்மேற்கு...

ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

‘ஒரு என்.ஆர்.ஐ. பின்னால் அனைவரும் செல்வது போல தோற்றம் ஏற்படுத்துவது மன மகிழ்ச்சி தரவில்லை’ – அவிநாசியில் துணை ஜனாதிபதி

கோவை, திருப்பூர் மாவட்ட சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக அவிநாசிலிங்கேஸ்வரர் கோயிலில் தரிசனம் செய்த துணை ஜனாதிபதி சி.பி. ர...

சட்டவிரோத குப்பைக் குவியல்கள்: 4 பேருக்கு தலா ஒரு லட்சம் அபராதம் - கோவை மாநகராட்சி நடவடிக்கை

கோவை சிங்காநல்லூரில் சட்டவிரோதமாக குப்பைகளை குவித்த நான்கு பேருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் என ஒரே நாளில்  மொத்தம் ரூ.4 லட...

கோவையில் GKNM செவிலியர் கல்லூரியை திறந்து வைத்து துணை குடியரசுத் தலைவர் சிறப்புரை..!

கோவையில் ஜி. குப்புசாமி நாயுடு அறக்கட்டளை சார்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள செவிலியர் கல்லூரியை துணை குடியரசுத் தலைவர் ச...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் மன்ற தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற...