நீலகிரி உதகையில் கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணி பலியான சோகம்..!

உதகை - கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதியில் அடர் பனிமூட்டம் காரணமாக காய்கறி ஏற்றி வந்த லாரியும் சுற்றுலா சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியான நிலையில் மூவர் படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதி.



நீலகிரி: உதகையிலிருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தலைக்குந்தா பகுதியில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது.



இந்நிலையில் மலை காய்கறி ஏற்றி வந்த லாரியும், சுற்றுலாப் பயணிகள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த கர்நாடகா மாநிலம் கொள்ளேகாளை பகுதியை சேர்ந்த மகாநந்தா(34) என்பவர் உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில், அவரது மனைவி லாவண்யா மற்றும் அவர்களது உறவினர்கள் லிங்கராஜ் மற்றும் ராஜேஷ்வரி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடந்த 3 பேரையும் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



பின்னர், 3 பேரும் மேல் சிகிச்சைகாக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து புதுமந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக மண்டாஸ் புயல் காரணமாக உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் மூடுபனி மற்றும் மழை பெய்து வந்ததால், எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக் உள்ளாகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...