நீலகிரி உதகையில் கார், லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - கர்நாடகாவை சேர்ந்த சுற்றுலா பயணி பலியான சோகம்..!

உதகை - கூடலூர் நெடுஞ்சாலையில் உள்ள தலைகுந்தா பகுதியில் அடர் பனிமூட்டம் காரணமாக காய்கறி ஏற்றி வந்த லாரியும் சுற்றுலா சென்ற காரும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் பலியான நிலையில் மூவர் படுகாயமடைந்து கோவை மருத்துவமனையில் அனுமதி.



நீலகிரி: உதகையிலிருந்து கூடலூர் செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள தலைக்குந்தா பகுதியில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது.



இந்நிலையில் மலை காய்கறி ஏற்றி வந்த லாரியும், சுற்றுலாப் பயணிகள் சென்ற காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.



இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே காரில் பயணம் செய்த கர்நாடகா மாநிலம் கொள்ளேகாளை பகுதியை சேர்ந்த மகாநந்தா(34) என்பவர் உயிரிழந்தார்.

மேலும் இந்த விபத்தில், அவரது மனைவி லாவண்யா மற்றும் அவர்களது உறவினர்கள் லிங்கராஜ் மற்றும் ராஜேஷ்வரி ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து அங்கு வந்த போலீசார் காயமடந்த 3 பேரையும் மீட்டு உதகை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.



பின்னர், 3 பேரும் மேல் சிகிச்சைகாக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

சம்பவம் குறித்து புதுமந்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2 நாட்களாக மண்டாஸ் புயல் காரணமாக உதகை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடும் மூடுபனி மற்றும் மழை பெய்து வந்ததால், எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக் உள்ளாகி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...