கோவை ராமநாதபுரத்தில் நடைபெற்ற சிறந்த மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில், ஆசிரியர்கள் தான் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களை கவனிக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குநர் நாகராஜ முருகன் கூறியுள்ளார்.
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதில் தமிழக மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் நாகராஜ முருகன், மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளி நிறுவனர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் பேசியதாவது, கோவை பல்வேறு பாரம்பரியங்களை கொண்டுள்ளது. மேலும் தொழில் வளர்ச்சி, கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதி என அனைத்திற்கும் பெயர் போன மாவட்டமாக உள்ளது.
தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு கூட்டங்கள் நடத்தி மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் கருத்துக்களையும் கேட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பள்ளிக்கல்வித்துறை ஒரே குடைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போதைய அரசு மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களை நியமனம் செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வி துறையில் எந்த குறை இருந்தாலும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதற்கு தமிழக அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும் நமது மாநிலம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என கல்வியில் சிறந்த மாநிலமாக உள்ளது. மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்கள், செல்போன்களுக்கு மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.
சமீப காலமாக போதை பழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள், இதுவரை அப்படி இல்லை, மாணவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். ஆசிரியர்கள் வெறும் பாடம் கற்றுக் கொடுக்கும் இயந்திரமாக மட்டும் இருக்க கூடாது.
பாடத்திட்டத்துடன் சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களை கைவிட்டால் அவர்களை செரிவுபடுத்த ஆள் இல்லாமல் போய்விடும், ஆசிரியர்கள் தான் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களை கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதில் தமிழக மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் நாகராஜ முருகன், மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளி நிறுவனர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் பேசியதாவது, கோவை பல்வேறு பாரம்பரியங்களை கொண்டுள்ளது. மேலும் தொழில் வளர்ச்சி, கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதி என அனைத்திற்கும் பெயர் போன மாவட்டமாக உள்ளது.
தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு கூட்டங்கள் நடத்தி மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் கருத்துக்களையும் கேட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பள்ளிக்கல்வித்துறை ஒரே குடைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போதைய அரசு மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களை நியமனம் செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வி துறையில் எந்த குறை இருந்தாலும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதற்கு தமிழக அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும் நமது மாநிலம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என கல்வியில் சிறந்த மாநிலமாக உள்ளது. மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்கள், செல்போன்களுக்கு மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.
சமீப காலமாக போதை பழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள், இதுவரை அப்படி இல்லை, மாணவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். ஆசிரியர்கள் வெறும் பாடம் கற்றுக் கொடுக்கும் இயந்திரமாக மட்டும் இருக்க கூடாது.
பாடத்திட்டத்துடன் சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களை கைவிட்டால் அவர்களை செரிவுபடுத்த ஆள் இல்லாமல் போய்விடும், ஆசிரியர்கள் தான் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களை கவனிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.