ஆசிரியர்களும் கைவிட்டால் மாணவர்களை செரிவுபடுத்த ஆள் இல்லை - கோவையில் தமிழக மெட்ரிக்குலேஷன் பள்ளிகளின் இயக்குநர் நாகராஜ முருகன்

கோவை ராமநாதபுரத்தில் நடைபெற்ற சிறந்த மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழாவில், ஆசிரியர்கள் தான் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களை கவனிக்க வேண்டும் என மெட்ரிகுலேசன் பள்ளிகளின் இயக்குநர் நாகராஜ முருகன் கூறியுள்ளார்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள சிறந்த மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.



இதில் தமிழக மெட்ரிக்குலேசன் பள்ளி இயக்குநர் நாகராஜ முருகன், மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள், தனியார் பள்ளி நிறுவனர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.



இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் பேசியதாவது, கோவை பல்வேறு பாரம்பரியங்களை கொண்டுள்ளது. மேலும் தொழில் வளர்ச்சி, கல்வி நிறுவனங்கள், மருத்துவ வசதி என அனைத்திற்கும் பெயர் போன மாவட்டமாக உள்ளது.

தமிழக முதல்வர் பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு கூட்டங்கள் நடத்தி மெட்ரிக்குலேசன் பள்ளிகளின் கருத்துக்களையும் கேட்டு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பள்ளிக்கல்வித்துறை ஒரே குடைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

தற்போதைய அரசு மெட்ரிக்குலேசன் பள்ளிகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களுக்கும் மாவட்ட கல்வி அலுவலர்களை நியமனம் செய்து அரசாணையை வெளியிட்டுள்ளது. பள்ளி கல்வி துறையில் எந்த குறை இருந்தாலும் விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதற்கு தமிழக அரசுக்கு நன்றி சொல்ல வேண்டும். மேலும் நமது மாநிலம் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகம் என கல்வியில் சிறந்த மாநிலமாக உள்ளது. மாநில பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இன்றைய சூழலில் சமூக வலைத்தளங்கள், செல்போன்களுக்கு மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.

சமீப காலமாக போதை பழக்கத்திற்கு ஆளாகி வருகிறார்கள், இதுவரை அப்படி இல்லை, மாணவர்கள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் கவனிக்க வேண்டும். ஆசிரியர்கள் வெறும் பாடம் கற்றுக் கொடுக்கும் இயந்திரமாக மட்டும் இருக்க கூடாது.

பாடத்திட்டத்துடன் சிறப்பு பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆசிரியர்களும் மாணவர்களை கைவிட்டால் அவர்களை செரிவுபடுத்த ஆள் இல்லாமல் போய்விடும், ஆசிரியர்கள் தான் கூடுதல் கவனம் செலுத்தி மாணவர்களை கவனிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...