ஆனைகட்டியில் உள்ள வித்யாவனம் என்ற பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சியில் பங்கேற்ற ஆட்சியர் சமீரன், அதே பள்ளியில் பழங்குடியின மக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைத்தார்.
கோவை: கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் உள்ள வித்யா வனம் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டார். பின்னர் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களிடம் அவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.

இதனையடுத்து அப்பள்ளியில் பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைத்து பழங்குடியின மக்களுக்காக நூலகம் கட்டிய பள்ளி நிர்வாகத்தினரை பாராட்டினார்.

அதனை தொடர்ந்து ஆனைக்கட்டி பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார். பின்னர் சலீம் அலி பறவைகள் சரணாலயத்தில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் "போலாம் ரைட்" நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கலந்து கொண்டார். பின்னர் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களிடம் அவர்களின் கண்டுபிடிப்புகள் குறித்து கேட்டறிந்தார்.
இதனையடுத்து அப்பள்ளியில் பழங்குடியின மக்களுக்காக கட்டப்பட்டுள்ள நூலகத்தை திறந்து வைத்து பழங்குடியின மக்களுக்காக நூலகம் கட்டிய பள்ளி நிர்வாகத்தினரை பாராட்டினார்.
அதனை தொடர்ந்து ஆனைக்கட்டி பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலை கடையில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு வழங்கப்படும் பொருட்களின் தரத்தினை ஆய்வு செய்தார். பின்னர் சலீம் அலி பறவைகள் சரணாலயத்தில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடும் "போலாம் ரைட்" நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்.