'மாண்டஸ் புயல்' - நீலகிரி மாவட்டத்தில் 2வது நாளாக கடும் குளிர், மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

மாண்டஸ் புயல் காரணமாக உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 2வது நாளாக அடர்ந்த பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவுவதால், சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி.


நீலகிரி: “மாண்டஸ் புயல்” காரணமாக நேற்று காலை முதல் நீலகிரி மாவட்டத்தில் கடும் பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது.

கடுமையான குளிர் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதனுடன் மழையும் பெய்ததால் முக்கிய சாலைகள் மற்றும் சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.



இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த பனி மூட்டத்துடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.



மேலும் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் வாகனங்கள் அனைத்தும் குறைந்த வேகத்தில் முகப்பு விளக்குகளை ஏரிய விட்டபடி பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...