'மாண்டஸ் புயல்' - நீலகிரி மாவட்டத்தில் 2வது நாளாக கடும் குளிர், மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

மாண்டஸ் புயல் காரணமாக உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரி ஆகிய பகுதிகளில் 2வது நாளாக அடர்ந்த பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவுவதால், சாலைகளில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி.


நீலகிரி: “மாண்டஸ் புயல்” காரணமாக நேற்று காலை முதல் நீலகிரி மாவட்டத்தில் கடும் பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது. குறிப்பாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அடர்ந்த பனி மூட்டத்துடன் கடும் குளிர் நிலவி வருகிறது.

கடுமையான குளிர் காரணமாக அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வீடுகளில் முடங்கும் நிலை ஏற்பட்டது. அதனுடன் மழையும் பெய்ததால் முக்கிய சாலைகள் மற்றும் சுற்றுலா தளங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.



இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் நீலகிரி மாவட்டத்தில் அடர்ந்த பனி மூட்டத்துடன் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.



மேலும் எதிரே வரும் வாகனங்கள் கூட தெரியாத அளவுக்கு பனிமூட்டம் இருப்பதால் வாகனங்கள் அனைத்தும் குறைந்த வேகத்தில் முகப்பு விளக்குகளை ஏரிய விட்டபடி பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் டியிருப்பு பகுதியில் பதுக்கி வைத்து குட்கா விற்பனை; 60 கிலோ பறிமுதல் – 2 வட மாநில இளைஞர்கள் கைது

திருப்பூர் நொச்சிபாளையம் பகுதியில் குடியிருப்பு வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 60 கிலோ குட்கா பொருட்களை போல...

மின்கம்பி விழுந்து சோலார் மின்வேலியில் மின்சாரம் பாய்ந்து பெண் விவசாயி பரிதாபமாக உயிரிழப்பு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் நாயக்கன்பாளையம் ஊராட்சி அண்ணாநகர் பகுதியில் அறுந்து விழுந்த மின்கம்பி சோலார்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...