கோவை ஈச்சனாரி அருகே பதுக்கி வைத்திருந்த 3.6 டன் ரேசன் அரிசி பறிமுதல்….!

நேற்று இரவு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது, ஈச்சனாரி விநாயகர் கோவில் பின்புறம் இருந்த திறந்த வெளியில் இருந்த அறையில் 3 6 டன் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.



கோவை: கோவையில் இருந்து ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதனை கேரளாவிற்கு அதிக லாபத்தில் விற்பனை செய்யும் சட்டவிரோதமான செயலை தடுக்கும் பொருட்டு, மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை ஈச்சனாரி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று இரவு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஈச்சனாரி விநாயகர் கோவில் பின்புறம் இருந்த திறந்த வெளியில் இருந்த அறையில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அவற்றை சோதனை செய்த போது, அவை அனைத்தும் ரேசன் அரிசி என்று தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 3.6 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அரிசியை பதுக்கியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சட்டமன்றத்தின் சிம்மக் குரல் வானதி அக்கா; மீண்டும் வாய்ப்பு கொடுங்கள்: கோவையில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி ..!

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி வடவள்ளி பகுதியில் பிரச்சா...

கோவை திமுகவின் கோட்டையாக மாறப்போகிறது; முதல்வர் கொடுத்த பொறுப்பை செந்தில் பாலாஜி சிறப்பாக நிறைவேற்றுவார்: கோவையில் கமல்ஹாசன் பரப்புரை..!

கோவை ராஜவீதியில், கோவை தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தீவி...

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...