கோவை ஈச்சனாரி அருகே பதுக்கி வைத்திருந்த 3.6 டன் ரேசன் அரிசி பறிமுதல்….!

நேற்று இரவு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் ரோந்து பணி மேற்கொண்ட போது, ஈச்சனாரி விநாயகர் கோவில் பின்புறம் இருந்த திறந்த வெளியில் இருந்த அறையில் 3 6 டன் ரேசன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.



கோவை: கோவையில் இருந்து ரேசன் அரிசியை மலிவு விலைக்கு வாங்கி அதனை கேரளாவிற்கு அதிக லாபத்தில் விற்பனை செய்யும் சட்டவிரோதமான செயலை தடுக்கும் பொருட்டு, மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் தீவிர கண்காணிப்பு, வாகன சோதனை மற்றும் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை ஈச்சனாரி அருகே குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் நேற்று இரவு ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, ஈச்சனாரி விநாயகர் கோவில் பின்புறம் இருந்த திறந்த வெளியில் இருந்த அறையில் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அவற்றை சோதனை செய்த போது, அவை அனைத்தும் ரேசன் அரிசி என்று தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த 3.6 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அரிசியை பதுக்கியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...