குனியமுத்தூர் - சுந்தராபுரம் இணைப்பு சாலையின் ஓரத்தில் இருந்த சரக்கொன்றை மரம் வெட்டப்பட்டதை தடுத்தி நிறுத்திய அப்பகுதி மக்கள் விஏஓ மற்றும் காவல் ஆய்வாளரிடம் மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.
கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிராமத்தில் உள்ள குனியமுத்தூர் முதல் சுந்தராபுரம் இணைப்பு சாலையில் அப்போலோ மருந்தகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தின் அருகில், சுமார் 10 வயது மதிப்புத்தக்க சரக்கொன்றை மரம் ஒன்று இருந்தது.

இந்நிலையில், இந்த மரத்தை வட இந்தியர் ஒருவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து, மரம் வெட்டியது தொடர்பாக வருவாய் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரசு நிலங்களில் இருக்கும் மரத்தை முறையாக அனுமதி பெறாமல் வெட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குனியமுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குனியமுத்தூர் காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மரத்தை வெட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், இந்த மரத்தை வட இந்தியர் ஒருவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து, மரம் வெட்டியது தொடர்பாக வருவாய் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அரசு நிலங்களில் இருக்கும் மரத்தை முறையாக அனுமதி பெறாமல் வெட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குனியமுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குனியமுத்தூர் காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மரத்தை வெட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.