கோவை குனியமுத்தூரில் சாலையோரம் இருந்த சரக்கொன்றை மரத்தை வெட்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை மனு

குனியமுத்தூர் - சுந்தராபுரம் இணைப்பு சாலையின் ஓரத்தில் இருந்த சரக்கொன்றை மரம் வெட்டப்பட்டதை தடுத்தி நிறுத்திய அப்பகுதி மக்கள் விஏஓ மற்றும் காவல் ஆய்வாளரிடம் மரத்தை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிராமத்தில் உள்ள குனியமுத்தூர் முதல் சுந்தராபுரம் இணைப்பு சாலையில் அப்போலோ மருந்தகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மருந்தகத்தின் அருகில், சுமார் 10 வயது மதிப்புத்தக்க சரக்கொன்றை மரம் ஒன்று இருந்தது.



இந்நிலையில், இந்த மரத்தை வட இந்தியர் ஒருவர் வெட்டியதாக கூறப்படுகிறது. இதை அங்கிருந்த பொதுமக்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து, மரம் வெட்டியது தொடர்பாக வருவாய் ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அரசு நிலங்களில் இருக்கும் மரத்தை முறையாக அனுமதி பெறாமல் வெட்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, குனியமுத்தூர் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் குனியமுத்தூர் காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் மரத்தை வெட்டியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...