நீலகிரி உதகை அருகே 2 ஆண்டுகளுக்கு பின் தீபத்திருவிழாவை உற்சாகமாக கொண்டாடிய படுகர் இன மக்கள்..!

ஊதகை அடுத்த நஞ்சநாடு கிராமத்தில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில், படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அதில் மிகப்பெரிய கிராமமாக உள்ளது உதகை அடுத்த நஞ்சநாடு கிராமம்.

இந்த கிராமத்தில், ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் திருவண்ணாமலை தீபத்திற்கு அடுத்தபடியாக “லக்கிஷா ஹப்பா” எனப்படும் கார்த்திகை தீபத் திருவிழா நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு கிராமத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டு நடனமாடி தீபத்திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.



முன்னதாக “தொட்ட மனெ” எனப்படும் மூதாதையர்களின் இல்லத்தில் இருந்து பந்தம் எடுத்து வந்து குடியிருப்பு அருகே உள்ள கொடி மரத்தில் தீபம் ஏற்றப்பட்டது.



பின்னர் இளைஞர்கள் நடனமாடி ஊர் பெரியவர்கள் மற்றும் பூசாரியை அழைத்து வந்து ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூடி இருந்த இடத்தில் சிறப்பு பூஜை செய்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொடி மரத்தில் வைக்கப்பட்ட தீச்சட்டியில் தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் படுகர் இன மக்கள் தீபத் திருவிழாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.



இந்த தீபத் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாரம்பரிய உடையணிந்து நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...

நொய்யலில் கழிவுநீர் கலப்பு: தொழிற்சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சி - மாவட்ட நிர்வாகமும் காரணம் - பாமக மனு

சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் நொய்யல் ஆற்றில் கலப்பதை தடுக்க வலியுறுத்தி, பாமக நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த...

மின்சார நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு கோரிக்கை

மின்சார நிலை கட்டண உயர்வால் குறு மற்றும் சிறு தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள கோவை தொழில் அமைப்புக...

உதயநிதி ஸ்டாலின், முஸ்தபா மீது நடவடிக்கை கோரி கோவையில் சக்தி சேனா கட்சி மனு

சனாதனம் குறித்து பேசிய கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம்சாட்டி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் தவெக முஸ்தபா மீது...

கோவையில் கனமழை: பழமையான வேப்பமரம் முறிந்து விழுந்து கார், வீடு, மின்கம்பம் சேதம்

கோவை துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அப்பநாயக்கன்பாளையத்தில் சுமார் 200 ஆண்டுகள் பழமைய...

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...