நீலகிரி உதகை அருகே 2 ஆண்டுகளுக்கு பின் தீபத்திருவிழாவை உற்சாகமாக கொண்டாடிய படுகர் இன மக்கள்..!

ஊதகை அடுத்த நஞ்சநாடு கிராமத்தில் கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்ட நிலையில், படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களில் படுகர் இன மக்கள் வசித்து வருகின்றனர். அதில் மிகப்பெரிய கிராமமாக உள்ளது உதகை அடுத்த நஞ்சநாடு கிராமம்.

இந்த கிராமத்தில், ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக கார்த்திகை தீபத் திருவிழா நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் திருவண்ணாமலை தீபத்திற்கு அடுத்தபடியாக “லக்கிஷா ஹப்பா” எனப்படும் கார்த்திகை தீபத் திருவிழா நீலகிரி மாவட்டம் நஞ்சநாடு கிராமத்தில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட படுகர் இன மக்கள் பாரம்பரிய உடை அணிந்து கலந்து கொண்டு நடனமாடி தீபத்திருவிழாவை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.



முன்னதாக “தொட்ட மனெ” எனப்படும் மூதாதையர்களின் இல்லத்தில் இருந்து பந்தம் எடுத்து வந்து குடியிருப்பு அருகே உள்ள கொடி மரத்தில் தீபம் ஏற்றப்பட்டது.



பின்னர் இளைஞர்கள் நடனமாடி ஊர் பெரியவர்கள் மற்றும் பூசாரியை அழைத்து வந்து ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கூடி இருந்த இடத்தில் சிறப்பு பூஜை செய்து அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கொடி மரத்தில் வைக்கப்பட்ட தீச்சட்டியில் தீபம் ஏற்றப்பட்டது.

அப்போது கோவிந்தா கோவிந்தா என்ற கோஷங்களுடன் படுகர் இன மக்கள் தீபத் திருவிழாவில் பங்கேற்று வழிபாடு செய்தனர்.



இந்த தீபத் திருவிழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாரம்பரிய உடையணிந்து நடனமாடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...