கோவையில் கொடி நாள் நன்கொடை வழங்கும் நிகழ்வு - நன்கொடை வழங்கி தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் சமீரன்

முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் 'படைவீரர் கொடிநாள்' இன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, கோவையில் நடைபெற்ற கொடி நாள் நன்கொடை வழங்கும் நிகழ்வை ஆட்சியர் சமீரன் துவக்கி வைத்தார்.



கோவை: இந்திய முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் தேதி "படைவீரர் கொடி நாள்" கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நடைமுறை கடந்த 1949-ம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நாளையொட்டி, நாடு முழுவதும் கொடி நாள் நன்கொடை வசூலிக்கப்படும்.

இதன் மூலம் கிடைக்கும் நிதிகள் அனைத்தும், படை வீரர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்காகவும், பணியின் போது உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறு வாழ்விற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.



அதன்படி கோவையில் படைவீரர் கொடி நாள் அனுசரிக்கப்பட்டு கொடி நாள் நன்கொடை பெறப்படுகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நன்கொடை வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் துவக்கி வைத்தார்.



முன்னதாக தேசிய மாணவர் படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



இதையடுத்து மாவட்ட ஆட்சியர் நன்கொடை வழங்கியதை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் அங்கு வந்திருந்த பொதுமக்கள் பலரும் நன்கொடைகளை வழங்கினர்.

இந்த நன்கொடை வசூலை முன்னாள் ராணுவப் படையினர் மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு: ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு நிலவரம்

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது...

பெங்களூர் -கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்

பெங்களூரில் இருந்து கோவைக்கு காரில் கடத்தி வரப்பட்ட 450 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை வடவள்ளி போலீசார் பறிமு...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...