கோவையில் அழகு நிலைய ஊழியர் கொலையில் கைதான மேலும் ஒரு நபர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது - ஆட்சியர் நடவடிக்கை

கிராஸ்கட் ரோட்டில் உள்ள அழகு நிலையத்தில் பணிபுரிந்து வந்த பிரபு என்பவரை 12 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த வழக்கில், ஏற்கனவே மூன்று குற்றவாளிகளில் ஒருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், மற்றொரு குற்றவாளியான கார்த்திக் என்பவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.


கோவை: ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி சேர்ந்தவர் பிரபு (வயது 39). இவர் கோவை கிராஸ்கட் ரோட்டில் உள்ள அழகு நிலையத்தில் ஊழியராக வேலை செய்தார். இவர், சரவணம்பட்டியில் உள்ள அழகு நிலையம் நடத்திவரும் கவிதா என்பவரின் வீட்டில் தங்கி இருந்தார்.

கவிதாவும், பிரபுவும் நெருங்கி பழகி வந்த நிலையில், கவிதாவுக்கு, திவாகர், கார்த்திக் ஆகிய வாலிபர்களுடனும் தொடர்பு இருந்ததாக தெரிகிறது. எனவே, இது தொடர்பாக பிரபுவுக்கும், கவிதாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

அப்போது, பிரபு ஆபாச படங்களை வெளியிடுவேன் என்று கூறி கவிதாவை மிரட்டி உள்ளார். இதனால் பிரபுவை கொலை செய்ய திட்டமிட்ட கவிதா, கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி திவாகர், கார்த்திக் என தனது ஆன நண்பர்களுடன் சேர்ந்து பிரபுவை கொலை செய்ததுடன், உடலை 12 துண்டுகளாக வெட்டி குப்பைத்தொட்டி, கிணறு என பல்வேறு இடங்களில் வீசி சென்றனர்.

பின்னர், தீவிர விசாரணையில் கொலை வழக்கு தொடர்பாக கவிதா, திவாகர், கார்த்திக், ஆகிய 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில், கைதான திவாகர் ஏற்கனவே பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு இருந்ததால், அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

அதன் பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திவாகர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார். இதுபோல கார்த்திக்கும் பல்வேறு குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டு வந்ததால் அவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பரிந்துரை செய்தார்.

மாவட்ட கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மற்றொரு குற்றவாளியான கார்த்திகை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். உத்தரவின் பேரில், போலீசார் கார்த்திக்கை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளனர்.

குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான ஆணை நகலும் சிறையில் உள்ள அவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...