சுந்தராபுரம் அருகே தனியார் நாட்டிய பள்ளியின் பூட்டை உடைத்து சிலைகளை திருடிச் சென்ற சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளை கொண்டு கார்த்திக் (25) மற்றும் கிரண் (22). என்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை: கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியை சேர்ந்தவர் முரளி (50). இவர், அதே பகுதியில் நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறார்.
இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு நாட்டிய பள்ளிக்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து, அங்கிருந்த நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் ஆகியவை திருடிச் சென்றனர்.

திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த குனியமுத்தூர் போலீசார், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து உதவி ஆணையாளர் ரகுபதி ராஜா உத்தரவின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த சிசிடிவி காட்சிகளில், இரண்டு மர்ம நபர்கள் கட்டை பையில் சிலைகளை வைத்து எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து தலைமறைவான மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சுந்தராபுரம் மாச்சம்பாளையம் ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்த கார்த்திக் (25) மற்றும் கிரண் (22) என்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், இருவரும் போதையில் கூடுதல் மது பாட்டில்களை வாங்க திருடியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த சிலைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு நாட்டிய பள்ளிக்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து, அங்கிருந்த நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் ஆகியவை திருடிச் சென்றனர்.
திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த குனியமுத்தூர் போலீசார், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து உதவி ஆணையாளர் ரகுபதி ராஜா உத்தரவின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த சிசிடிவி காட்சிகளில், இரண்டு மர்ம நபர்கள் கட்டை பையில் சிலைகளை வைத்து எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து தலைமறைவான மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சுந்தராபுரம் மாச்சம்பாளையம் ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்த கார்த்திக் (25) மற்றும் கிரண் (22) என்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், இருவரும் போதையில் கூடுதல் மது பாட்டில்களை வாங்க திருடியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த சிலைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.