கோவையில் நாட்டிய பள்ளியில் சிலைகள் திருடிய வழக்கு - மது பாட்டில்கள் வாங்க திருடிய இருவர் கைது…!

சுந்தராபுரம் அருகே தனியார் நாட்டிய பள்ளியின் பூட்டை உடைத்து சிலைகளை திருடிச் சென்ற சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளை கொண்டு கார்த்திக் (25) மற்றும் கிரண் (22). என்ற இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை சுந்தராபுரம் செங்கப்ப கோனார் வீதியை சேர்ந்தவர் முரளி (50). இவர், அதே பகுதியில் நாட்டியப்பள்ளி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு நாட்டிய பள்ளிக்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து, அங்கிருந்த நடராஜர் சிலை, சிவகாமி அம்மன் சிலை, நந்தி சிலை, விநாயகர் சிலை, யானை சிலை, இரண்டு குத்து விளக்குகள் ஆகியவை திருடிச் சென்றனர்.



திருட்டு தொடர்பான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வந்த குனியமுத்தூர் போலீசார், சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து உதவி ஆணையாளர் ரகுபதி ராஜா உத்தரவின் பேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அந்த சிசிடிவி காட்சிகளில், இரண்டு மர்ம நபர்கள் கட்டை பையில் சிலைகளை வைத்து எடுத்துச் சென்றது பதிவாகியிருந்தது. இதையடுத்து தலைமறைவான மர்ம நபர்களை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், சுந்தராபுரம் மாச்சம்பாளையம் ஆறுமுக கவுண்டர் வீதியை சேர்ந்த கார்த்திக் (25) மற்றும் கிரண் (22) என்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில், இருவரும் போதையில் கூடுதல் மது பாட்டில்களை வாங்க திருடியது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த சிலைகளை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...