நீலகிரி கூடலூர் அருகே ஒரு வயது குட்டி யானை சேற்றில் சிக்கி உயிரிழந்த சோகம்..!

கூடலூர் வாச்சிக்கொல்லி பகுதியில் சேற்றில் சிக்கி உயிரிழந்த குட்டி யானையை மீட்க வனத்துறையினர் தாய் யானையை விரட்ட முயன்ற போது, ஆக்ரோஷத்துடன் துரத்திய நிலையில், கும்கி யானையை கொண்டு தாய் யானையை வனப்பகுதிக்குள் விரட்டிய பின் குட்டி யானையின் உடலை மீட்டனர்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட வாச்சிகொல்லி பகுதியில் யானைகளின் பிளிறல் சத்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது. அது குறித்து அப்பகுதியில் உள்ள பழங்குடியினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போது ஒரு குட்டி யானை அங்குள்ள நீர் நிலையில் இருந்த சேற்றில் சிக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அதன் அருகே தாய் யானை சத்தமிட்டவாறு நிற்பதை கண்ட வனத்துறையினர், தாய் யானையை விரட்ட முயன்றனர்.

அப்போது ஆக்ரோஷத்தில் இருந்த தாய் யானை வனத்துறையினரை துரத்தியது. இதையடுத்து, அங்கு கும்கி யானை வரவழைக்கப்பட்டு, தாய் யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.



நீண்ட நேரத்திற்கு பிறகு தாய் யானை வனப்பகுதி சென்றதை தொடர்ந்து, இறந்த குட்டியின் உடலை மீட்டு முதுமலை வன கால்நடை மருத்துவர் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.



அப்போது இறந்தது ஒரு வயது மதிக்கதக்க ஆண் குட்டி யானை என்பது தெரிய வந்தது.

Newsletter

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...