கோவை கவுண்டம்பாளையம் அருகே சேவல் சண்டை சூதாட்டம் - 8 பேரை கைது செய்த போலீசார்..!

கவுண்டம்பாளையம் அருகே சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.10,700 பணம் மற்றும் 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்த நிலையில், 8 பேரையும் ஜாமீனில் விடுவித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அருகேயுள்ள மாரியம்மன் கோவில் வீதி பகுதியில் சிலர் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபடுவதாக துடியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து துடியலூர் காவல் ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் குருசந்திர வடிவேல் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடைபெறுவது தெரியவந்தது.

இதனையடுத்து சேவல் சண்டையில் ஈடுபட்டு வந்த வடவள்ளியைச் சேர்ந்த சிவானந்தன், மணிகண்டன், செந்தில்குமார், பாபு, ரத்தினபுரியைச் சேர்ந்த கனகராஜ், கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த ராஜா, செல்வக்குமார் மற்றும் நரசிம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 10,700 ரூபாய் பணம் மற்றும் 2 கட்டு சேவல்களை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 8 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...