கோவை பாலத்துறையில் டிப்பர் லாரி மோதியதில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த பள்ளிச் சிறுமி படுகாயம்..!

பாலத்துறையில் சாலை அருகே விளையாடிக்கொண்டிருந்த பள்ளிச் சிறுமியின் டிப்பர் லாரி ஏறியதில் காலில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், லாரி ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் பாலத்துறை அடுத்த கருஞ்சாமி கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளியான இவரது மகள் கனிஷ்கா (12) பச்சாபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமி சக குழந்தைகளுடன் பாலத்துறை - பச்சாபாளையம் சாலை அருகே கில்லி விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது சாலை அருகே சென்ற குச்சியை எடுக்க கனிஷ்கா சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சிறுமியின் இரண்டு கால் பாதத்தின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே வேகமாக டிப்பர் லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் மீது மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...