கோவை பாலத்துறையில் டிப்பர் லாரி மோதியதில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த பள்ளிச் சிறுமி படுகாயம்..!

பாலத்துறையில் சாலை அருகே விளையாடிக்கொண்டிருந்த பள்ளிச் சிறுமியின் டிப்பர் லாரி ஏறியதில் காலில் காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், லாரி ஓட்டுனர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் பாலத்துறை அடுத்த கருஞ்சாமி கவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கூலித்தொழிலாளியான இவரது மகள் கனிஷ்கா (12) பச்சாபாளையம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் சிறுமி சக குழந்தைகளுடன் பாலத்துறை - பச்சாபாளையம் சாலை அருகே கில்லி விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது சாலை அருகே சென்ற குச்சியை எடுக்க கனிஷ்கா சென்றுள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து சிறுமியின் இரண்டு கால் பாதத்தின் மீது ஏறி இறங்கியுள்ளது. இதில் படுகாயமடைந்த சிறுமியை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவர்கள் சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனிடையே வேகமாக டிப்பர் லாரியை ஓட்டி வந்த கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் மீது மதுக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளையாடிக் கொண்டிருந்த சிறுமியின் மீது லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...