உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக காரில் சென்றவர்கள் மீது டேங்கர் லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த நிலையில் படுகாயமடைந்த மற்றொருவர் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதி.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர் தனது குடும்பத்தினருடன் காங்கேயத்தில் இருந்து சென்னிமலையில் உள்ள தனது உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்றுள்ளனர்.
அப்போது சென்னிமலையில் இருந்து காங்கேயம் நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்த டேங்கர் லாரி, சிவியார்பாளையம் அருகே விஸ்வநாதன் ஒட்டி வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், காரில் பயணித்த விஸ்வநாதன் மற்றும் அவரது மாமியார் மணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதில் படுகாயமடைந்த ரமணன் மற்றும் உமாபதி ஆகியோர் காங்கேயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், ரமணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும் பயணம் செய்த ரமணன் மற்றும் உமாபதி ஆகியோர் படுகாயங்களுடன் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலன் அளிக்காமல் ரமணன் உயிரிழந்தார்.
மேலும், உமாபதி அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காங்கேயம் அருகே கார் மீது டேங்கர் லாரி மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.