சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி சமூக நீதிக் கட்சி சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

சூயஸ் குடிநீர் குழாய் அமைப்பதற்காக பொது குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படுவதால், சூயஸ் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்ய பரிந்துரைக்க வலியுறுத்தி சமூக நீதிக்கட்சி தலைவர் பன்னீர்செல்வம் மனு.



கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேர குடிநீர் திட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த குடிநீர் விநியோகம் சூயஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.



இந்நிலையில் இதனை ரத்து செய்யக்கோரி சமூக நீதி கட்சியின் தலைவர் பன்னீர்செல்வம் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

அவரது மனுவில், கோவை மாநகராட்சியின் 78 மற்றும் 79 ஆகிய வார்டு பகுதிகளில் சூயஸ் குடிநீர் குழாய் அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள பொது குடிநீர் குழாய் இணைப்புகளை மாநகராட்சி நிர்வாகம் துண்டித்து வருகிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக குடிநீர் விநியோக ஒப்பந்த உரிமையை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை ரத்து செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.



மனு அளிக்க வந்தவர் மாதிரி குடிநீர் குழாய் மற்றும் கண்டன பதாகைகளை கையில் ஏந்தியபடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து தனது கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...