அன்னூர் தொழில் பூங்கா: எங்கள் நிலங்களை காப்பாற்றுங்கள் விநாயகரே...! - கோவை புலியகுளம் கோவிலுக்கு மனு அளிக்க விவசாயிகள் நடைபயணம்

அன்னூரில் தொழில்பூங்கா (சிப்காட்) அமைப்பதற்காக சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருவதை கண்டித்து, அதிகாரிகளிடம் மனு அளித்து பயனில்லை என்பதால் புலியகுளம் விநாயகரிடம் மனு அளிக்க விவசாயிகள் நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.


கோவை: அன்னூரில் அமையவுள்ள தொழில் பூங்காவிற்கு விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை புலியகுளம் விநாயகருக்கு மனு கொடுக்க நடைபயணம் மேற்கொண்டுள்ள விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அன்னூரில் தொழில்பூங்கா (சிப்காட்) அமைப்பதற்காக சுமார் 3000 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு விவசாயிகள், விவசாய சங்கங்கள், அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தொடர் போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன.



இந்நிலையில், தொழில்பூங்காவிற்காக நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் விவசாய மக்கள் புலியகுளம் விநாயகரிடம் மனு அளிக்க நடைபயணம் மேற்கொண்டுள்ளனர்.



இதில், சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று அன்னூரில் இருந்து புலியகுளம் விநாயகர் கோவில் வரை நடைபயணமாக வந்து கொண்டுள்ளனர்.

அவர்கள் விநாயகரிடம் அளிக்க உள்ள மனுவில், நிலங்களை கையகப்படுத்துவது குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களிடம் மனு அளித்து எந்த பயனும் இல்லாததால், நீங்கள் (விநாயகர்) எங்களை காப்பாற்ற வேண்டுமென குறிப்பிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...