உலக மண் தினத்தை முன்னிட்டு டிச.5-ல் மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ சார்பில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக மண்‌ தினத்தை முன்னிட்டு டிசம்பர்‌ 5-ம்‌ தேதி ஈஷா மையத்தின் மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ சார்பில் ‌தமிழகம்‌ முழுவதும்‌பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு.


சென்னை: உலக மண்‌ தினத்தை முன்னிட்டு மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ சார்பில்‌ மண்‌ வளப்‌ பாதுகாப்பின்‌ முக்கியத்துவம்‌ குறித்து பொதுமக்களிடம்‌ விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தில் 60க்கும்‌ மேற்பட்ட இடங்களில்‌ டிசம்பர்‌ 5-ம்‌ தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடைபெறவுள்ளது.

இது தொடர்பான சென்னை பிரஸ்‌ கிளப்பில்‌ காவேரி கூக்குரல்‌ இயக்கத்தின்‌ மாநில கள ஒருங்கிணைப்பாளர்‌ செய்தியாளர்களிடம் பேசியதாவது,



சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும்‌ வரும் 5-ம்‌ தேதி காலை 8 மணி முதல்‌ 9 மணி வரை பேருந்து நிலையம்‌, ரயில்‌ நிலையம்‌, கடற்கரை உள்ளிட்ட பொது மக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடத்தப்பட உள்ளது.

'மண்ணுக்காக நடப்போம்‌' 'மண்ணுக்காக நிற்போம்‌' 'மண்ணுக்காக சைக்கிள்‌ பேரணி' உள்ளிட்ட நிகழ்ச்சிகள்‌ தமிழ்நாடு முழுக்க மண்‌ காப்போம்‌ இயக்கத்தின்‌ தன்னார்வ தொண்டர்கள்‌ தமிழகத்தின்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ நடத்த திட்டமிட்டுள்ளனர்‌.

சென்னையில்‌ மடிப்பாக்கம்‌ ஏரிக்கரை, எலியட்ஸ்‌ கடற்கரை, மீனாட்சி கல்லூரி, கபாலீஸ்வரர்‌ கோயில்‌ உள்ளிட்ட இடங்களிலும்‌, மதுரை தேவர்‌ சிலை, வேலூர்‌ கோட்டை, ஓசூர்‌ ரயில்‌ நிலையம்‌, ராமேஸ்வரம்‌ ராமநாத சுவாமி கோயில்‌ போன்ற மக்கள்‌ அதிகம்‌ கூடும்‌ இடங்களில்‌ விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்‌ நடைபெறவுள்ளது.

அதே நாளில் இந்தியா முழுவதும்‌ உள்ள அனைத்து மாநிலங்களிலும்‌ பல்வேறு நிகழ்ச்சிகள்‌ நடைபெறவுள்ளது மண்‌ வள பாதுகாப்பு குறித்து சட்டங்கள்‌ மற்றும்‌ கொள்கைகளை உருவாக்க வேண்டும்‌ என்பதை வலியுறுத்தி ஈஷா நிறுவனர்‌ சத்குரு ஜக்கி வாசுதேவ், மண்‌ காப்போம்‌ என்ற சர்வதேச சுற்றுச்சூழல்‌ இயக்கத்தை தொடங்கி உள்ளார்‌.

தற்போது விவசாய மண்ணில்‌ கரிம சத்தின்‌ அளவு 0.5% என்ற அபாயகரமான அளவில்‌ உள்ளது. இதனை குறைந்தபட்ச அளவான 3 முதல்‌ 6% வரை அதிகரிக்க வேண்டும்‌. இல்லையெனில்‌ உணவுப்‌ பற்றாக்குறை, பருவநிலை மாற்றம்‌, வாழ்வாதார இழப்பு, மக்கள்‌ இடம்பெயர்தல்‌ உள்ளிட்ட பல பிரச்சினைகள்‌ உருவாகும்‌.

மார்ச்‌ 21-ம்‌ தேதி லண்டனில்‌ இருந்து தனது மோட்டார் சைக்கிள்‌ பயணத்தை தொடங்கிய சத்குரு இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ்‌, உள்ளிட்ட பல ஐரோப்ப நாடுகளுக்கு பயணித்துள்ளார்‌. அந்த நாடுகளில்‌ வேளாண்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ துறை அமைச்சர்கள்‌, அரசியல்‌ தலைவர்கள்‌, விஞ்ஞானிகள்‌, சினிமா பிரபலங்கள்‌, ஊடக துறையினர்‌ என பல்வேறு தரப்பினர்‌ சந்தித்து கலந்துரையாடினார்‌.

ஐரோப்பாவில்‌ இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற அவர்‌ இந்தியாவிற்கு வந்து தமிழ்நாட்டில்‌ தனது பயணத்தை நிறைவு செய்தார்‌. சர்வதேச அளவில்‌ பெரும்‌ தாக்கத்தை ஏற்படுத்தி வரும்‌ மண்‌ காப்போம்‌ இயக்கம்‌ 391 கோடிக்கும்‌ அதிகமான மக்களின்‌ ஆதரவைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...