நீலகிரி உதகை - மசினகுடி நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த மக்னா யானை - வாகன ஓட்டிகள் அச்சம்..!

மக்னா யானை வழிமறித்ததால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திய நிலையில், சுமார் அரை மணி நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்ற பின் போக்குவரத்து சீரானது.



நீலகிரி: உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக ஊட்டிக்கு தான் வந்து செல்ல வேண்டும்.

அதற்காக அவர்கள் மசினகுடி - மாவனல்லா - கல்லட்டி மலைப்பாதையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சார்ந்த சுற்றுலா பயணிகளும் இந்த சாலை வழியாக தான் உதகைக்கு வருகின்றனர்.

சுமார் 30 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி இருப்பதால் அடிக்கடி காட்டு யானைகள் சாலை ஓரத்திற்கு வருவது வழக்கமாக உள்ளது.



இந்த நிலையில் நேற்று மாலை மக்னா யானை என்று அழைக்கக்கூடிய தந்தம் இல்லாத ஆண் யானை ஒன்று பொக்காபுரம் சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்களை வழிமறித்து நின்றது.



இதனை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் இருபுறமும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர்.



இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இந்நிலையில், மக்னா யானை வனப்பகுதிக்குள் சென்றதை எடுத்து போக்குவரத்து சீரானது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...