நீலகிரி உதகை - மசினகுடி நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்த மக்னா யானை - வாகன ஓட்டிகள் அச்சம்..!

மக்னா யானை வழிமறித்ததால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திய நிலையில், சுமார் அரை மணி நேரம் கழித்து யானை வனப்பகுதிக்குள் சென்ற பின் போக்குவரத்து சீரானது.



நீலகிரி: உதகை அருகே உள்ள மசினகுடி பகுதியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைக்காக ஊட்டிக்கு தான் வந்து செல்ல வேண்டும்.

அதற்காக அவர்கள் மசினகுடி - மாவனல்லா - கல்லட்டி மலைப்பாதையை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக கர்நாடக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சார்ந்த சுற்றுலா பயணிகளும் இந்த சாலை வழியாக தான் உதகைக்கு வருகின்றனர்.

சுமார் 30 கிலோமீட்டர் தூரம் கொண்ட இந்த நெடுஞ்சாலையின் இருபுறமும் அடர்ந்த வனப்பகுதி இருப்பதால் அடிக்கடி காட்டு யானைகள் சாலை ஓரத்திற்கு வருவது வழக்கமாக உள்ளது.



இந்த நிலையில் நேற்று மாலை மக்னா யானை என்று அழைக்கக்கூடிய தந்தம் இல்லாத ஆண் யானை ஒன்று பொக்காபுரம் சாலை சந்திப்பு பகுதியில் நெடுஞ்சாலையின் குறுக்கே வாகனங்களை வழிமறித்து நின்றது.



இதனை கண்டு அச்சமடைந்த வாகன ஓட்டிகள் இருபுறமும் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தினர்.



இதனால் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இந்நிலையில், மக்னா யானை வனப்பகுதிக்குள் சென்றதை எடுத்து போக்குவரத்து சீரானது.

Newsletter

தமிழ்நாடு நாள் விழா: கங்கா செவிலியர் கல்லூரியில் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றிய மாணவர்கள்.

கோவையிலுள்ள கங்கா செவிலியர் கல்லூரியில், மாணவர் செவிலியர் சங்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தின விழாவில், தமிழர் பாரம்ப...

துடியலூர் தொப்பம்பட்டியில் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு

கோவை துடியலூர் அருகே தொப்பம்பட்டி யமுனா நகரில் நேற்று இரவு இரண்டு வீடுகளில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 4 ஓட்டு வீடுகள் எ...

கோவை மாநகராட்சி வார்டு 22 திமுக கவுன்சிலர் கட்சியில் இருந்து விலகல்

திமுகவில் ஜனநாயகத்திற்கும் உழைப்பிற்கும் அங்கீகாரம் இல்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து கோவை மாநகராட்சி 22-வது...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...