வேலை தேடி கோவைக்கு வந்தவர்களை அரிவாளால் தாக்கி செல்போன், பணம் கொள்ளை - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

பண்ருட்டியில் இருந்து கோவைக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க வந்த 2 பொறியாளர்களை மர்ம நபர்கள் நால்வர் வழிமறித்து அரிவாளால் தாக்கி செல்போன் மற்றும் ரூ.3,000 பணம் ஆகியவற்றை பறித்து சென்றுள்ளனர்.



கோவை: கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த பொறியியல் பட்டதாரிகள் பூபதி (22), வீரபாண்டி (24). இவர்கள் 2 பேரும் சரவணம்பட்டியில் தனியார் கல்வி நிறுவனத்தில் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொள்வதற்காக வந்துள்ளனர்.

இருவரும் 1.15 மணியளவில் பண்ருட்டியில் இருந்து கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்துக்கு வந்து இறங்கியுள்ளனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஆவாரம்பாளையத்தில் உள்ள நண்பரின் அறைக்கு நடந்து சென்றுள்ளனர்.

பாரதியார் சாலை தனியார் மருத்துவமனை அருகே சென்ற போது 4 பேர் கொண்ட கும்பல் திடீரென வழிமறித்தனர். பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து பூபதி, வீரபாண்டி ஆகியோரை அரிவாளால் தாக்கி விட்டு, அவர்களிடம் இருந்த 2 செல்போன்கள், ரூ.3,000 பணத்தை பறித்துக் கொண்டு, தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் காயமடைந்த 2 பேரையும் அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து காட்டூர் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...